யூனியன் பிரதேசமான லடாக், மைனஸ் 30 டிகிரி உள்ள உறைபனி ஏரியில் மராத்தான் ஓட்டத்தை முதல்முறையாக வெற்றிகரமாக நடத்தி, கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
யூனியன் பிரதேசமான லடாக்கில், கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் உள்ள பாங்காங் சோ ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் வெப்ப நிலை மைனஸ் 30 டிகிரியாக உள்ளது. இந்தியா முதல் சீன எல்லை வரை பரந்து விரிந்து 700 சதுர கிலோ மீட்டர் வரை உள்ள இந்த உறைபனி ஏரியில் முதல்முறையாக 21 கி.மீ. அரை மாரத்தான் நேற்று நடந்தது. இந்த மாரத்தானை லடாக் நிர்வாகம் வெற்றிரமாக நடத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.